புகையிலையால் மாரடைப்பு வர வாய்ப்பு.!!

| Wednesday, September 15, 2010


வாஷிங்டன் : புகையில்லா புகையிலையை பயன்படுத்தினால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நவீன ஆய்வு ஒன்று கூறுகிறது. சிகரெட்டுக்கு மாற்றாக புகையில்லாத புகையிலை பொருட்கள் சில நாடுகளில் கிடைக்கின்றன. பவுடராகவும், கிரீமாகவும் கிடைக்கும் இதை டீன் வயது இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவு குறித்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அதன் விவரம்: புகை இல்லாத புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படக்கூடிய மாரடைப்பு, புற்று நோய் ஆகிய பாதிப்புகள் இவர்களுக்கும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. புகை இல்லா புகையிலை பொருட்களால் ஆபத்து குறைவு என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் தவறு.

எந்த ஒரு புகையிலை பொருளும் உடலுக்கு நல்லதல்ல. எனவே, புகையில்லா புகையிலை பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்ÕÕ என இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மரியான் பியானோ தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive