வருமானம் அதிகரித்தாலும் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கிறதா? என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை 54 வயதில்தான் மகிழ்ச்சியடைவதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதேநேரம், அதிக கவலை கொள்வது 45 வயதில்தான் என தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி வங்கியான பர்ஸ்ட் டைரெக்ட் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சிÕ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதன் விவரம்:
பொதுவாக, 45 முதல் 54 வயதுக்குள் பெண்களின் கவலை உச்சத்தை அடைகின்றது. 55 முதல் 64 வயதுக்குட்பட்ட காலத்தில் அவர்களுடைய கவலை 36 சதவீதம் குறைகிறது. இதன்மூலம் 54 வயதினர் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மற்ற எல்லா வயதினரையும்விட, இந்த வயதினர் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு 4 முக்கிய காரணங்களை கூறுகின்றனர். அதில் ஒன்று, புதிய வேலை கிடைப்பது. திருப்தியில்லாத உறவை துண்டிப்பது, மோசமான நட்பை கழட்டி விடுவது, 3 மாதங்களுக்கு மேல் சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவை மற்ற 3 காரணங்கள்.
பொதுவாக, 45 முதல் 54 வயதுக்குள் பெண்களின் கவலை உச்சத்தை அடைகின்றது. 55 முதல் 64 வயதுக்குட்பட்ட காலத்தில் அவர்களுடைய கவலை 36 சதவீதம் குறைகிறது. இதன்மூலம் 54 வயதினர் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மற்ற எல்லா வயதினரையும்விட, இந்த வயதினர் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு 4 முக்கிய காரணங்களை கூறுகின்றனர். அதில் ஒன்று, புதிய வேலை கிடைப்பது. திருப்தியில்லாத உறவை துண்டிப்பது, மோசமான நட்பை கழட்டி விடுவது, 3 மாதங்களுக்கு மேல் சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவை மற்ற 3 காரணங்கள்.



0 comments:
Post a Comment