இன்டெர்நெட் குற்றம் டோக்கியோ முதலிடம்.!!

| Friday, September 3, 2010


டோக்கியோ: இன்டெர்நெட் குற்றம் புரிவதில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. அதன் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்த ஆண்டின் முதல் ஆறுமாத காலகட்டத்தில் குற்றாவளிகளின் எண்ணிக்கை 2ஆயிரத்த 444 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இத்தகைய குற்றவாளிகளின் எண்ணிக்கை 586 மட்டுமே.

தேசிய போலீஸ் ஏஜென்சியின் இத்தகைய சர்வே எடுக்கும் பணி கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆறுமாத கால இடைவெளியில் தொடர்ந்து நடத்தி வருகிறது.18 வயதிற்குட்ட குழந்தை குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 212 ஆக இருந்தது தற்போது 329 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தகைய குற்றவாளிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது தடைசெய்யப்பட்ட படங்களை முறை கேடாக பார்ப்பதும், மற்றவர்களுடன் ஷேரிங் செய்து கொள்வதுமே காரணம் என போலீஸ் ஆய்வில் தெரிவிக்கிறது.

2009-ல் முதல் ஆறு மாத கால கட்டத்தில் 56 இருந்த எண்ணிக்கை இரண்டாவது ஆறு மாதகாலத்தில் 75 ஆக கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட குற்றங்களின் எண்ணிக்கை குற்றத்தை ஊக்குவிப்பதற்காக அல்ல. இருப்பினும் இனிமேல் இது போன்ற குற்றங்களை வளர விடாமல் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோக்கம் என அதன் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive