ஆண், பெண்ணிற்கு அறிவு சமம்: விஞ்ஞானிகள் கருத்து.!

| Monday, September 13, 2010


ஆண், பெண்ணிற்குஅறிவு வளர்ச்சி சம அளவிலேயே உள்ளன என்றுமருத்துவ விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.ஆண் உடலால் பலமானவன் என்பதும், பெண் மனதால் பலமானவள் என்பதும் பொதுவான கருத்து.ஆனால், அறிவு வளர்ச்சியை பொருத்தவரை இருபாலினத்தவருக்கும் சிறு,சிறு வேறுபாடுகள் தவிரசம அளவிலேயே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆண், பெண் இடையிலான அறிவாற்றல் வேறுபாடு உடற்கூறுகளால் இல்லாமல், வாழ்க்கை அனுபவத்தினால் நிர்ணயிக்கப்படுவதாக விஞ்ஞானிகள்கூறுகின்றனர்.

கற்பிப்பதால் ஏற்படுவதை விட இயற்கையாகவே மனிதர்களுக்கு தனித்திறமை, சிறப்பு இயல்பு,ஆளுமைத் திறன் போன்றவை உருவாகின்றன.ஆனால், அவர்கள் இருக்கும் வாழ்க்கைச் சூழலுக்குஏற்ப, இதன் அளவு மாறுபடுகிறது.ஆணோ, பெண்ணோபிறக்கும் போதேஅனைத்து விதமான தகுதிகளுடன் பிறப்பதில்லை.மாறாக, பெற்றோர் மற்றும்ஆசிரியர்களால் அவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.இது குறித்து, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல நிபுணர் கார்டிலியா பைன்என்பவர், "டெலுஷன்ஸ் ஆப்ஜெண்டர்' என்ற புத்தகம்எழுதியுள்ளார். அதில் ஆண், பெண் இருவருக்கும் மூளை மற்றும்அதன் நரம்புகள் வளர்ச்சியில் சிறு, சிறு வேறுபாடுகளைத் தவிர, பெரிய வித்தியாசங்கள் இல்லை என்றும், தோற்றத்தில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தைசிகாகோ மருத்துவப்பள்ளியின் பேராசிரியர் லைஸ்எலியட் ஆமோதிக்கிறார்.இது குறித்து எலியட்கூறியதாவது:பிள்ளைகளின் அறிவுவளர்ச்சி என்பது மரபு வழியாய் வருவது அல்ல;மாறாக, கற்பதன் மூலம்வளர்ச்சி பெறுகின்றனர்.சிறுவன், சிறுமி, ஆண்,பெண் இவர்களுக்கிடையேயான அறிவு திறனில்வேறுபாடு இருக்கலாம். அவர்களுக்கு உள்ளதனித்திறன், சிறப்பியல்பு,ஆளுமை திறன் ஆகியவை,அவர்களின் வாழ்க்கைச்சூழல் கொடுக்கும் அனுபவம் மூலமே பெறப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் அறிவு வளர்ச்சி மேம்படுகிறது.இவ்வாறு எலியட் கூறினார்.

மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive