நிதிபற்றாக்குறையால் சேவையை நிறுத்துகிறதுபி.பி.சி..!

| Friday, September 10, 2010


உலக முழுவதும் மிகப்பெரிய ஒளிபரப்பும் சேவையினை கொண்டுள்ள மீடியா நிறுவனமான பி.பி.சி. தனது நிதிபற்றாக்குறையினால் ஆட்குறைப்பு செய்வதுடன் சில முக்கிய நாடுகளில் ஒளிபரப்பு சேவையினை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. பி.பி.சி. ஒளிரப்பு நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 25 சதவீவதம் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. .

நிதிபற்றாகுறையினால் தள்ளாடி வந்த நிலையிலும் இந்நிறுவனம் வெளிநாடு களில் தனது ஒளிபரப்பு அலுவலகங்களை நிறுவியுள்ளது. போதிய விளம்பர வருமான இல்லாத சில நாடுகளில் இதன் ஓளி பரப்பினை நிறுத்தி வைக்கவுள்ளது. அதன்படி பர்மா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தனது ஒளிபரப்பினை நிறுத்தவுள்ளது. மேலும் பிற நாடுகளில் உள்ள அலுவலக நிர்வாகிகளை 272 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டுமாறும் அறிவித்தியுள்ளது.

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive