வெறும் பணத்தால் மகிழ்ச்சியை வாங்கி விட முடியாது’ என்று சொல்பவரா நீங்க? கொஞ்சம் தள்ளி நிற்கவும். ஆண்டுக்கு ஸி35 லட்சம் சம்பாதிப்பவர்கள்தான் உண்மையான மகிழ்ச்சியுடன் இருப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மனவியல் துறை பேராசிரியர்கள் குழு, வருமானத்துக்கும் மன மகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தது.
அதன்படி, வாழ்க்கையே தினமும் ஒரு போராட்டமாக இருப்பதாக குறைந்த வருமானம் பெறுவோர் தெரிவித்தனர். வருமானம் அதிகரித்தால் அதற்கேற்ப மகிழ்ச்சியும் அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆண்டுக்கு ஏறக்குறைய ஸி35 லட்சம் வருமானம் பெறுவோர்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. இது அமெரிக்காவுக்குதான் என்ற போதிலும் அந்தந்த நாட்டின் கரன்சி மதிப்புக்கு ஏற்ப இதே தொகையை வருமானமாக பெறுவோருக்கும் பொருந்தும் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.
அதேநேரம், ஆண்டுக்கு ஸி70 லட்சம் முதல் ஸி95 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் மகிழ்ச்சி குறைவதாகவும், ஸி95 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் சொந்த வாழ்க்கையை கவனிக்க முடியாமல் நிம்மதி இழப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வாழ்க்கையே தினமும் ஒரு போராட்டமாக இருப்பதாக குறைந்த வருமானம் பெறுவோர் தெரிவித்தனர். வருமானம் அதிகரித்தால் அதற்கேற்ப மகிழ்ச்சியும் அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆண்டுக்கு ஏறக்குறைய ஸி35 லட்சம் வருமானம் பெறுவோர்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. இது அமெரிக்காவுக்குதான் என்ற போதிலும் அந்தந்த நாட்டின் கரன்சி மதிப்புக்கு ஏற்ப இதே தொகையை வருமானமாக பெறுவோருக்கும் பொருந்தும் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.
அதேநேரம், ஆண்டுக்கு ஸி70 லட்சம் முதல் ஸி95 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் மகிழ்ச்சி குறைவதாகவும், ஸி95 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் சொந்த வாழ்க்கையை கவனிக்க முடியாமல் நிம்மதி இழப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



0 comments:
Post a Comment