ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி..?

| Monday, July 25, 2011


சாதரண ரஜினிகாந்தாக இருந்தவர், சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி? என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார் பழம்பெரும் இயக்குனரான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். இவர் ரஜினிகாந்தை வைத்து 20 படங்களுக்கும் மேல் இயக்கியவர் ஆவார்.

நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது;

ரஜினி ரசிகர்களின் பொது நல சேவைகள் தொடர வேண்டும். அவர்கள் ரஜினியின் புகழ் பாடுவதை விட அவர் பெயரில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ரஜினிகாந்த் விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் வந்து மாநாடு நடத்தி ரசிகர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.

ரஜினியை தெய்வங்கள் காப்பாற்றியது என்று கூறுவதை விட ரஜினிக்காக சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை செய்த ரசிகர்கள் தான் தெய்வங்கள். ரசிகர்களின் பிரார்த்தனையால் தான் ரஜினி குணமடைந்து உயிர் வாழ்கிறார்.

ரஜினிகாந்த் கேமிராவிற்கு முன்பு நன்றாக நடிப்பார். கேமிராவுக்கு பின்னால் மற்றவர்களை போல அவருக்கு நடிக்க தெரியாது. அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க முடிகிறது. தன்னை தியாகம் செய்து அர்ப்பணிப்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். வாழ்க்கைக்கு ரோல் மாடலாக வாழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.” என்றார்.



THE HOT BARE BACK BEAUTIES - IMAGES மேலும் பார்க்க‌

பில்லா 2: இருமடங்கு பட்ஜெட்

| Friday, July 15, 2011


விஷ்ணுவர்தன் அஜீத், நயன்தாரா நடித்த பில்லா படத்தின் பட்ஜெட்டை விட, சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பில்லா 2ன் பட்ஜெட் இருமடங்காகும்.

பில்லா 2 இந்தியாவிலேயே முதல்முறையாக ரெட் எபிக் கேமிராவில் படம்பிடிக்கப்படுகிறது. நேற்று முதல் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ள பில்லா 2 படத்தின் பட்ஜெட் 32 கோடிகளாகும். இப்படத்தின் ஹீரோயினாக மும்பை மாடல் ஹியூமா நடிக்கிறார்.

புகையிலையால் மாரடைப்பு வர வாய்ப்பு.!!

| Wednesday, September 15, 2010


வாஷிங்டன் : புகையில்லா புகையிலையை பயன்படுத்தினால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நவீன ஆய்வு ஒன்று கூறுகிறது. சிகரெட்டுக்கு மாற்றாக புகையில்லாத புகையிலை பொருட்கள் சில நாடுகளில் கிடைக்கின்றன. பவுடராகவும், கிரீமாகவும் கிடைக்கும் இதை டீன் வயது இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவு குறித்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அதன் விவரம்: புகை இல்லாத புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படக்கூடிய மாரடைப்பு, புற்று நோய் ஆகிய பாதிப்புகள் இவர்களுக்கும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. புகை இல்லா புகையிலை பொருட்களால் ஆபத்து குறைவு என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் தவறு.

எந்த ஒரு புகையிலை பொருளும் உடலுக்கு நல்லதல்ல. எனவே, புகையில்லா புகையிலை பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்ÕÕ என இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மரியான் பியானோ தெரிவித்தார்.

55 மனைவி, 55 குழந்தைகள் ஒரு வினோத மனிதர்.!

| Tuesday, September 14, 2010


பாரீஸ் : ஒரே முகவரி... மாதத்துக்கு ஒரு புது மனைவி, ஆண்டுக்கு ஒரு புது குழந்தை... அரசு சலுகைகளை பெற பிரான்சில் ஆப்ரிக்க மனிதர் செய்த விநோத மோசடியால் அரசுக்கு ஆண்டு இழப்பு ஸி6 கோடி. விழிபிதுங்கி நிற்கின்றனர் அதிகாரிகள். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டு குடியுரிமை பெற்று வசிக்கிறார் ஆப்ரிக்க மனிதர் ஒருவர். வயது 54. ஒரே முகவரியில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக புதிய பெயரில் மனைவிகள், அவர்களுக்கு பிறந்ததாக குழந்தைகள் என அரசு அலுவலகங்களில் அந்த கில்லாடி மனிதர் பதிவு செய்து வந்தார்.

மிகவும் லேட்டாக சந்தேகப்பட்ட அதிகாரிகள், சமீபத்தில் அவரது முகவரிக்கு சென்று ரெய்டு நடத்தினர். அதில் வெளிவந்த விஷயங்களை அறிந்து அதிர்ந்தனர். ஆப்ரிக்க ஆசாமிக்கு அரசு புள்ளிவிவரங்களின்படி இதுவரை 55 மனைவிகள், அவர்கள் மூலம் 55 குழந்தைகள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி. ஆனால், ரெய்டின்போது அங்கு பெரும்பாலோர் இல்லை. அதிகாரிகள் வலைவீசி தேடியதில் இதுவரை 42 மனைவிகளை அடையாளம் கண்டுபிடித்து விட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒவ்வொருவரின் ஒரே குழந்தைக்கு அப்பா அவர்தான் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆப்ரிக்க மனிதரிடம் நடந்த விசாரணையில், கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், இரவு விடுதிகளிலும், செனேகல், மாலி, கேமரூன் போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும் கண்டதும் காதல் கொண்ட பெண்களை திருமணம் செய்ததாக கூறினார். 55 பெண்கள் மூலம் 55 குழந்தைகள் உள்ளதாக தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

ஸி14,000 வரை கட்டணம் செலுத்தி பிரான்ஸ் அலுவலகங்களில் 55 மனைவிகளுக்கு தங்கும் உரிமையை பெற்றதன் மூலம், அரசின் சலுகைகளை பெற்று தந்துள்ளார் ஆப்ரிக்க பலே மனிதர். அவரது 55 மனைவிகள், குழந்தைகளுக்கு அரசு சலுகைகளாக ஆண்டுக்கு ஸி6 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதுவே பல ஆண்டுகள் அடிப்படையில் ஸி100 கோடியை நெருங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்ஸ் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘அரசின் சலுகைகளைப் பெற்று, வேலையின்றி வாழ இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம் என தெரிகிறது.

ஆப்ரிக்க மனிதரும், அவரது மனைவிகள் என்று கூறப்படும் 55 பெண்களுக்கும்தான் அந்த 55 குழந்தைகள் பிறந்ததா என கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்’’ என்றார்.

"வீடியோ கேம்' மோகத்தால் பெற்ற குழந்தைகளை பட்டினி போட்ட தாய்

|


லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண், "வீடியோ கேம்' மீது கொண்ட வெறித் தனமான ஆர்வத்தால், தன் குழந்தைகளை பட்டினியால் பரிதவிக்க விட்டதுடன், செல்லமாக வளர்த்த இரண்டு நாய்களையும் பட்டினியில் போட்டு சாகடித்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்தவர் கிளாடியா என்ற பெண்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 33 வயதாகிறது. 9, 10 மற்றும் 13 வயதுகளில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர், செல்லமாக இரண்டு நாய்களையும் வளர்த்து வந்தார். இவரின் கணவர் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களாகவே, "வீடியோ கேம்' விளையாடுவதில் ஆர்வம் காட்டினார், கிளாடியா. குறிப்பாக, "ஸ்மாலர் வேர்ல்டு' என அழைக்கப்படும், "வீடியோ கேம்' மீது, இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. துவக்கத்தில் சில மணி நேரங்களை இதற்காக செலவிட்ட கிளாடியா, அடுத்த சில மாதங்களில், விளையாட்டிலேயே மூழ்கி விட்டார். நேரம் காலம் தெரியாமல், அந்த விளையாட்டிலேயே தொடர்ந்து ஈடுபட்டார். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூட தூங்குவது இல்லை. அந்த அளவுக்கு, "வீடியோகேம்' அவரை அடிமைப்படுத்தி விட்டது. இதனால், இவர் குழந்தைகள் சாப்பிட உணவில்லாமல் அவதிப்பட்டனர்.

குழந்தைகள் பசியால் துடித்தால், கடைகளில் விற்கும் குளிர்பானங்களை வாங்கி கொடுத்து விடுவார். மேலும், "பேக்' செய்யப்பட்ட உணவு வகைகளையும், அவ்வப்போது வாங்கி கொடுப்பார். சூடான உணவை சாப்பிடுவதற்காக அந்த குழந்தைகள் ஏங்கின. தொடர்ந்து ஒரே மாதிரியான ரெடிமேட் உணவுகளையே சாப்பிட்டதால், குழந்தைகளுக்கு சலிப்பு வந்து விட்டது. இதனால், சில நாட்கள் சாப்பிடாமலேயே பசியால் அவதிப்பட்டனர். குழந்தைகள் நிலைமை இப்படி என்றால், அவர் வளர்த்த செல்ல நாய்களின் நிலைமை மிகவும் மோசம். "வீடியோ கேம்' மோகத்தில், நாய்களை கவனிப்பதையே கிளாடியா மறந்து விட்டார். இதனால், நாய்கள் பசியால் துடித்து, இறந்து விட்டன. ஆறு மாதங்களாக, அந்த இரண்டு நாய்களின் உடல்களும் வீட்டுக்குள்ளேயே கிடந்தன. அவற்றை வெளியில் தூக்கிப் போட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல், தொடர்ந்து, "வீடியோ கேம்' விளையாடினார்.

இறந்துபோன நாய்களின் உடல்கள் அழுகி, துர்நாற்றம் அடித்தன. இது குறித்து தகவல் தெரிந்த பக்கத்து வீட்டுக்காரர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கிளாடியா வீட்டுச் சூழலை பார்த்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சாப்பாட்டு அறையிலேயே, இரண்டு நாய்களின் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்தன. வீணாகிப் போன உணவுப் பொருட்களும், குப்பை கூளங்களும் வீடு முழுவதும் நிறைந்து கிடந்தன. இது குறித்து கிளாடியாவுக்கு எதிராக பிரிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "இனிமேல் கிளாடியா, "வீடியோ கேம்' விளையாடக் கூடாது. செல்லப் பிராணிகளையும் வளர்க்க, அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. அவருடைய அஜாக்கிரதை காரணமாக இரண்டு நாய்கள் இறந்துள்ளதோடு, அவரின் குழந்தைகளும் பசியால் வாடியுள்ளன. எனவே, 75 மணி நேரம், அவர் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்காக, அவருக்கு பணம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது' என, தீர்ப்பளித்தது.

தொப்பையால் குடல் புற்றுநோய் வரலாம்.!!

| Monday, September 13, 2010


நீங்கள் ஆணாக இருந்தால் இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்துக்குள் இருக்க வேண்டும். பெண் என்றால் 31 அங்குலம்தான். மீறி வயிறு வளர்த்தால் குடல் புற்றுநோய் ஆபத்து காத்திருப்பதாக லண்டன் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி அமைப்பு சார்பில் இங்கிலாந்து மருத்துவ பேராசிரியர்கள் இணைந்து தொப்பைக்கும் குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தனர். சராசரி அளவைவிட அதிகமாகும் ஒவ்வொரு அங்குல இடுப்பு சுற்றளவும், குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 3 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இடுப்பு சுற்றளவு அதிகரிப்பதற்கேற்ப புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதை இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தி உள்ளது. ஆசிய நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கு இடுப்பு சுற்றளவு அதிகபட்சம் 35 அங்குலம் இருக்கலாம். பெண்களுக்கு 31.5 அங்குலத்தை தாண்டக் கூடாது. இதுவே வெள்ளையர், ஆப்ரிக்க ஆண்களுக்கு 37 அங்குலம் வரை பரவாயில்லை. இந்த அளவுகளைவிட இடுப்பு சுற்றளவு அதிகரித்தால் ஒவ்வொரு அங்குலத்துக்கும் 3 சதவீத புற்றுநோய் வாய்ப்பு அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சராசரி எடையை விட குறைந்து விடாமல் அதேநேரம் சரியான எடையும், இடுப்பு சுற்றளவும் பராமரிக்க வேண்டியது அவசியம். அப்படி செய்தால் இங்கிலாந்தில் மட்டும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை ஆண்டுக்கு 2,700 பேர் தவிர்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.


மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

அதிகம் சம்பாதித்தாலும் சந்தோஷம் இல்லை: ஆய்வுத் தகவல்.!

|


அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.

மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

Welcome