தொப்பையால் குடல் புற்றுநோய் வரலாம்.!!

| Monday, September 13, 2010


நீங்கள் ஆணாக இருந்தால் இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்துக்குள் இருக்க வேண்டும். பெண் என்றால் 31 அங்குலம்தான். மீறி வயிறு வளர்த்தால் குடல் புற்றுநோய் ஆபத்து காத்திருப்பதாக லண்டன் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி அமைப்பு சார்பில் இங்கிலாந்து மருத்துவ பேராசிரியர்கள் இணைந்து தொப்பைக்கும் குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தனர். சராசரி அளவைவிட அதிகமாகும் ஒவ்வொரு அங்குல இடுப்பு சுற்றளவும், குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 3 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இடுப்பு சுற்றளவு அதிகரிப்பதற்கேற்ப புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதை இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தி உள்ளது. ஆசிய நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கு இடுப்பு சுற்றளவு அதிகபட்சம் 35 அங்குலம் இருக்கலாம். பெண்களுக்கு 31.5 அங்குலத்தை தாண்டக் கூடாது. இதுவே வெள்ளையர், ஆப்ரிக்க ஆண்களுக்கு 37 அங்குலம் வரை பரவாயில்லை. இந்த அளவுகளைவிட இடுப்பு சுற்றளவு அதிகரித்தால் ஒவ்வொரு அங்குலத்துக்கும் 3 சதவீத புற்றுநோய் வாய்ப்பு அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சராசரி எடையை விட குறைந்து விடாமல் அதேநேரம் சரியான எடையும், இடுப்பு சுற்றளவும் பராமரிக்க வேண்டியது அவசியம். அப்படி செய்தால் இங்கிலாந்தில் மட்டும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை ஆண்டுக்கு 2,700 பேர் தவிர்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.


மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

2 comments:

சிங்கக்குட்டி said...

உடல் நலம் மிக அவசியம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

senthil velayuthan said...

eanpa ippadi ellam payamuthureenga...
enkala konjam santosama iruka vidunkapa...

thank u for ur post..

Post a Comment

Welcome

Blog Archive