200 ஆண்டுகளுக்கு பிறகு பூத்த அரிய வகை மலர்.!!

| Friday, September 10, 2010


லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் எனும் பத்திரிகையில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்தின் கடந்த 1765-ம் ஆண்டு முதன்முதலாக பிராங்கின் அலோடாமஹா எனும் தாவரவியில் இனத்தினைச் சேர்ந்த பிராங்க்ளின் எனும் மலர் பயிரிடப்பட்டது. இது மிகுந்த நறுமணம் கொண்டது.

டீ கப் போன்று வடிவில் அழகான வெள்ளை நிற இதழ்களை கொண்டது. இதனை லண்டனில் பிலடெல்பியா தாவரவியல் வல்லுனர் ஜான், வில்லியம் ஆகியோர் முதன்முதலாக தங்களது தோட்டத்தில் பிராங்க்ளின் மரத்தில் வளர்ந்தனர். அவர்கள் தங்களது நெருங்கிய நண்பரான பெஞ்சமின் பிராங்க்ளின் நினைவாக அவரது பெயரையே இம்மலருக்கு சூட்டினர்.

இந்நிலையில் நறுமணமிக்க இந்த மலர் பல்வேறு சுற்றுசூழல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மறைந்து போனது. எனினும் குரோன்வால் மாகாணத்தின் டூருரோ கிõமத்தைச் சேரந்த விவசாயி தனது தோட்டத்தில் பயிரிட்டு இம்மலரினை வெற்றிகரமா மீண்டும் மலர செய்தார். குளிந்த வெப்பநிலை உள்ள இடங்களில் ஏறத்தாழ 4 முதல் 7 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதிக நறுமணம் கொண்டது.

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive