2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்.!!

| Friday, September 3, 2010


“டி.பி.” எனப்படும் காச நோய் மிக கொடிய நோயாகும். இந்த நோய் கிருமிகளை கைதேர்ந்த நிபுணர்களால் மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே கண்டுபிடித்து வருகின்றன. இது கடந்த 125 ஆண்டு காலமாக நடை முறையில் உள்ளது.

தற்போது புதிய கருவிகள் மற்றும் தொழில் நுட்பம் மூலம் காசநோயை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிநவீன பரிசோதனை

நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் காசநோய் என சந்தேகிக்கப்படும் நபர்கள், அந்த நோய்க்கான மருந்து சாப்பிடுபவர்கள் என 1730 பேரிடம் 3 விதமான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

எக்ஸ்பர்ட், எம்.டி.பி., ஆர்.ஐ.எப். என்ற பரிசோதனைகள் நடத்தினர். அதன்மூலம் 98 சதவீதம் பேருக்கு காசநோய் உள்ளதா என 2 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர்.

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive