கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி: இங்கிலாந்து அரசு.!

| Monday, September 13, 2010


சமீப காலமாக இங்கிலாந்தில் கலாசாரம் சீரழிந்து வருகிறது. பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் கூட சீரழிந்து குழந்தை பெற்று வருகின்றனர். இதை தடுக்க அங்கு பள்ளிகளில் “செக்ஸ்” கல்வி புகுத்தப்பட்டுள்ளது.

இருந்தும், அங்கு சிறுமிகள் கர்ப்பம் அடைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே, குழந்தை பெறு வதை தடுப்பதற்காக அந் நாட்டு அரசு ஒரு புதிய நடவடிக்கையை மேற் கொள்ள உள்ளது.

அதாவது தகாத முறையில் “செக்ஸ்” உறவு கொண்டு கர்ப்பமாகும் சிறுமி களுக்கு எந்தவித தடையும் இன்றி கருகலைப்பு மாத்திரை கள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இங்கி லாந்தில் கருகலைப்பு மாத்திரைகள் பெற டாக்டர் கள் எழுதி கொடுத்த மருந்து சீட்டு வேண்டும்.

தற்போது, 13 வயது சிறுமி கூட மருந்து சீட்டு இன்றி மருந்து கடை களில் கருக்கலைப்பு மாத்திரை களை பெற முடியும். அதற் கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டம் வருகிற நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. முதலில் குறிப்பிட்ட 10 மருந்து கடைகளில் மட்டும் பரிசோதனை ரீதியில் இது நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு தொழிலாளர் கட்சி எம்.பி. ஷிம் தோப்பின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது போன்று தாராளமாக கரு கலைப்பு மாத்திரைகள் வழங்கப்படுவதன் மூலம் தகாத “செக்ஸ்” உறவுக்கு லைசென்ஸ் (உரிமம்) வழங்கியது போலாகிவிடும். கருக்கலைப்பு விவகாரத்தை சிறுமிகள் சாதாரணமாக எடுத்து கொண்டு விடுவார்கள் என கூறியுள்ளார்.

சிறுமி களுக்கு இது போன்ற மாத்திரைகளை மிகசாதாரணமாக வழங்க கூடாது என சமூக நல அமைப்பை சேர்ந்த நார்மன் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும் சிறுமிகள் குழந்தை பெறுவதை தடுக்கும் வகையில் அவசரகால நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது என அதிகாரி கெவின் நோபிள் கூறியுள்ளார்.

மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

2 comments:

Unknown said...

காலம் கெட்டுப் போயிடுச்சி!

Anonymous said...

Abovsan tapllat name please

Post a Comment

Welcome

Blog Archive