கண்டபடி எடை குறைக்கிறீர்களா.! மனநிலை பாதிக்குமாம்.!!

| Sunday, September 12, 2010


மெல்போர்ன் : ‘எந்த கடையில நீ அரிசி வாங்கறே’ன்னு கேட்டு ஒரே கிண்டல். எப்படியாவது 20 கிலோ குறைக்கணும் என்று திட்டமா... வேண்டாம், அதிவேகஎடை குறைப்பு, மனநோயில் முடியுமாம். புற்றுநோய் வரவும் வாய்ப்பு அதிகம்என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு. குங்பூக் தேசிய பல்கலைக்கழகத்தின்ஆராய்ச்சியாளர் குழு, உடல் எடை குறைதலுக்கும் நோய்களுக்கும் உள்ளதொடர்பு பற்றி விரிவான ஆய்வு நடத்தியது. அதில் மருந்து தயாரிப்பதில்பயன்படுத்தப்படும் ‘பிஓபி’ என்ற பொருளும், பூச்சி கொல்லிகளும் மனிதஉடலில் தங்கி விடுகின்றன.

பல்வேறு உடல்நலக் குறைவுகள், நோய் எதிர்ப்பு சக்தி அழிவு, மனநோய், புற்றுநோய் ஏற்படுத்துவதில் இந்த பிஓபி முக்கிய பங்கு வகிக்கிறது. எடைகுறைப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், வேறு வழிகளில் எடைகுறைத்தாலும் ‘பிஓபி’ அதிகளவில் உடலில் சேர்கிறது. 10 ஆண்டுகளில் உடல்எடை அதிகரித்தவர்களைவிட அதே காலத்தில் வேகமாக எடைகுறைந்தவர்களின் உடல் திசுக்களில் பிஓபி அதிகரித்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. எனவே, உடல் எடை வேகமாக குறைபவர்களுக்கு மனநோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகம் என்றுஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சி பேராசிரியர் லெஸ்லி கேம்பல் கூறுகையில், ‘‘பிஓபிஅதிகரிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறையும். அதனால், பல்வேறுநோய்கள் எளிதில் வந்து விடும். அதிகளவில் எடை குறைப்பால் மனநிலையும்பாதிக்கப்படும். புற்றுநோயை உருவாக்கும் கிருமிகள் பெருக வழியேற்படுத்திவிடும்’’ என்றார்.

மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

1 comments:

Unknown said...

இன்னும் இதைப் போன்ற தகவல்களைத் தாருங்கள்.
அத்துடன் word verification ஐயும் நீக்கி விடலாமே!

Post a Comment

Welcome

Blog Archive