புற்று நோய், இதய அடைப்பை நீக்கும் கல்லீரல் “திசு” தயாரிப்பு.!! விஞ்ஞானிகள் சாதனை.!!

| Friday, August 27, 2010


ஆண்டு தோறும் கல்லீரல் நோயினால் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக புற்று நோய், இருதய அடைப்பு, வலிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர்.

இந்த நோய்களை கல்லீரல் திசுக்களால் குணப்படுத்தி வருகின்றனர். எனவே, அவற்றை பல வழிகளில் தயாரித்து வருகின்றனர். தற்போது இவற்றை மனித தோலில் இருந்து தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். மனித தோலில் இருந்து “நீபுரோகிமிடு” திசுக்கள் எடுக்கப்பட்டு அதன் மூலம் கல்லீரல் திசுக்கள் உருவாக் கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மருத்துவ கண்டுபிடிப்பு இதழில் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு “கருஸ்டெம்” திசுக்களின் மூலம் கல்லீரல் நோய்கள் குணப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்காவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனித தோலில் இருந்து கல்லீரல் திசு தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive