கவர்ச்சி உடைகளால் வேலைக்கு ஆபத்து.!!

| Tuesday, August 31, 2010


லண்டன்: நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடந்தது. அதன் விவரம்: நேர்காணலுக்கு செல்வோர் மிடுக்கான ஆடைகள் அணிந்தால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கக்கூடும். பெண்கள் அணியும் உடையில் கவர்ச்சி அளவோடு இருந்தால் நல்லது. அதுவே, அதிகமானால் வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைந்து விடுகிறது.

இதுபோன்ற உடைகளால் தவறான எண்ணம் ஏற்படுவதே காரணம். ஆண்களை பொருத்தவரை இஸ்திரி செய்யாத சட்டை, கனமான பேன்ட், பொருந்தாத டை போன்றவற்றை அணிந்து செல்வதால் புறக்கணிக்கப்படுவோர் அதிகம்

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive