புற்றுநோய்க்கான 8 அறிகுறிகள் விஞ்ஞானிகள் தகவல்.!!

| Saturday, August 28, 2010


உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் திகழ்கிறது. அதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தில் உள்ள கிலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவை, ரத்தம், சிறுநீர், ரத்தசோகை மற்றும் உடல் தளர்வு போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டதாகும். பொதுவாக 200 வகையான புற்றுநோய்கள் உள்ளன.

இதில் குறிப்பாக மலக்குடலில் இருந்து ரத்தம் வெளியாகுதல், இருமலின் போது ரத்தம் வெளிவருதல், மார்பகத்தில் கட்டி அல்லது வீக்கம், எச்சில் மற்றும் உணவு விழுங்க மிகவும் சிரமப்படுதல், காலம் கடந்து மாதவிடாய் வருதல், சுரப்பிகள் சரி வர வேலை செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட 8 அறிகுறிகள் புற்றுநோய்க்கான தொடக்கம் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனே, டாக்டரை சந்தித்து தங்கள் உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இது ஒரு முன் எச்சரிக்கை மட்டுமே என்று தெளிவுப்படுத்தி உள்ளனர்.

0 comments:

Post a Comment

Welcome

Blog Archive